வங்கதேசத்துக்கு முதலைகள்
சென்னை முதலைப் பண்ணையிலிருந்து நாற்பது 'மகர்' சதுப்புநில முதலைகள் வங்கதேசத்துக்கு அனுப்பப்படவுள்ளன. நேற்றே 'பேக்' செய்துவிட்டார்கள்.
இதற்குக் காரணம் வங்கதேசத்திலிருந்த கடைசி மகர் முதலை மண்டையைப் போட்டதே. சென்னை முதலைப் பண்ணையில் கிட்டத்தட்ட 2,000 மகர் இன முதலைகள் உள்ளன.
கோயிஞ்சாமி இந்தச் செய்தியைத் தன் மகளிடம் சொன்னான்.
"அய்யோ, அப்ப இங்க முதலைங்கள்ளாம் இருக்காதா?"
"இல்லைம்மா, நம்மகிட்ட நெறைய இருக்கு. அதனால 40 முதலைங்கள மட்டும் அவங்ககிட்ட கொடுக்கறோம்!"
"அவங்களுக்கு எதுக்கு முதலைங்க வேணும்?"
"ஏன்னா, அவங்ககிட்ட இருந்த முதலை செத்துப்போச்சு"
"ஏன் செத்துப்போச்சு?"
"அவங்க சரியா கவனிக்கலை போல"
"அப்ப இப்ப போற முதலைங்கள சரியா கவனிச்சுப்பாங்களா, இல்லை இதையும் கொன்னுடுவாங்களா?"
ஆஹா! மாட்டிகிட்டோமே என்று முழித்தான் கோயிஞ்சாமி. நம்மூர் முதலைப் பண்ணை ஆசாமிங்க இந்த விஷயத்தைக் கேட்டாங்களா இல்லையான்னு தெரியலையே?

1 Comments:
எத்தனை முதலைகளை அனுப்பினாலும் இங்கிருக்கும் மகா / மெகா முதலைகளின் எண்ணிக்கை குறையாது :-))
Post a Comment
<< Home